Thol.Thirumavalavan
தொல்.திருமாவளவன் (பிறப்பு: ஆகஸ்ட் 17, 1962), ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி இயங்கி வருகின்றார். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது, 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் நாள் தொல்.திருமாவளவன் தனது அரசுப்பணியைத் துறந்தார். 2009 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமாவளவன், சில திரைப்படங்களில் நடித்துள்ளதோடு, இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.