x

Vaikom Muhammad Basheer

வைக்கம் முகமது பஷீர் (19 ஜனவரி 1908 - 5 ஜூலை 1994) மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப்பறம்பு என்ற ஊரில் பிறந்தார். இளம்வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார். வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்கள் வழியாகச் சென்றவர் பஷீர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூபி துறவி, சூதாட்ட விடுதி ஊழியர் ஆகிய பல தொழில்களைச் செய்திருக்கிறார். இளமையில் கடுமையான வறுமையைச் சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் இடதுசாரி சிந்தனையுடன் கம்யூனிஸ்டாக இருந்தவர், பின்னர், சூபி மரபை ஏற்றுக்கொண்டவர் ஆனார். பத்மஸ்ரீ விருது (1982), கேரள சாகித்ய அகாதமி விருது, சாகித்ய அகாதமி விருது, வள்ளத்தோள் விருது 1993 ஆகிய விருதுகளை தன் படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

Related Products