Valampuri John
வலம்புரி ஜான் (அக்டோபர் 14, 1946 - மே 8, 2005) ஒரு தமிழ் எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் ஆவார். 8-ஆம் வகுப்பு வரை உவரியில் பயின்றார். உயர்நிலைப்பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்றார். பொதுஆட்சியியலில் (Public Administration) முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட முதுவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் "பேராசிரியர் இரத்தினசுவாமி - நாடாளுமன்றவாதி" என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1992இல் முனைவர் (D.Litt) பட்டமும் வணிகமேலாண்மையில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார்.இவர் எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.