vamu komu
வா.மு.கோமு என்றழைக்கப்படும் கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, நாவல் எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது ;தவளைகள் குதிக்கும் வயிறு' என்ற சிறுகதைத் தொகுப்பு 2008-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. கவிதை,சிறுகதை, நாவல்கள் என இதுவரை 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.