x

Vannadasan

வண்ணதாசன் (22 ஆகஸ்ட் 1946) என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதிவரும் தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம். திருநெல்வேலியில் பிறந்த இவரது தந்தை இலக்கியவாதி தி.க.சிவசங்கரன் ஆவார். இவரது தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார். நவீனத் தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கினார். 1962-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் சில பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.. ஜூன் 10, 2018-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது. இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக, 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products