x

Vijay Mahindran

விஜய் மகேந்திரன், (பிறப்பு: 1978) தமிழ் எழுத்தாளர். பிஸியோதெரபி பயின்று அத்துறையில் பணியாற்றியுள்ள இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த 'நகரத்திற்கு வெளியே' என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் எழுத்தாளராக அறியப்பட்டவர். 2006-ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் சிறு கதைகள் எழுதிவருகிறார். இவரது 'நகரத்திற்கு வெளியே' சிறுகதைத் தொகுப்புக்கு, 2011-ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரைகள், விமர்சனங்கள், இணையம் என்று பன்முக தளத்தில் இயங்கி வரும் இவர், கடல் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் துவங்கி நூல்களை வெளியிட்டு வருகிறார்.

Related Products