V.Saminatha Sharma
வெ.சாமிநாத சர்மா (17 செப்டம்பர் 1895 - 7 சனவரி 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார். தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் பல மொழிகள் கற்றுப் புலமை அடைந்தார். துவக்கத்தில் தேசபக்தன் இதழிலும், பின்னர் திரு.வி. கவின் நவசக்தி இதழிலும் பணியாற்றினார். அங்கே சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் உதவி ஆசிரியராக இருந்தார். சென்னை மாகாண முன்னாள் பிரமதமரான டி.பிரகாசம் அவர்கள் நடத்திய தமிழ் பத்திரிக்கையான ஸ்வராஜ்யாவிலும் பணியாற்றினார். பின்னர் பர்மாவுக்கு சென்று அங்கு பத்தாண்டுகள் இருந்தார். அங்கு ரங்கூன் நகரத்தில் ஜோதி என்ற இதழைத் துவக்கி நடத்தி வந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பர்மா மீது படையெடுத்ததால் அங்கிருந்து குடும்பத்துடன் சென்னை வந்து சேர்ந்தார். இவர் பர்மாவில் இருந்த போதே பல நூல்களை எழுதினார். இங்கு வந்தும் பல நூல்களை எழுதினார். இவரது நூல்களை வெளியிடுவதற்காகவே சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தை துவக்கினார். சாமிநாத சர்மா 1978-ஆம் ஆண்டு மறைந்தார்.