x

Rajesh Kumar

ராஜேஷ்குமார் (பிறப்பு: 1947) ஒரு தமிழ் க்ரைம் நாவல் எழுத்தாளர் ஆவார். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500-க்கும் மேற்பட்ட நெடுங்கதை நாவல்களையும், 2000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 1980-களிலும் 90-களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். இவரது இயற்பெயர் ராஜகோபால். கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968-ல் கல்கண்டு இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். இவரது முதல் நாவல் “வாடகைக்கு ஒரு உயிர்” 1980-ல் வெளியானது. பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விவேக் - ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் ஜோடி பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 2009-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Products